நடிகை ஜோதிகா தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் இரண்டு பிள்ளைகள் இருப்பது நாம் அறிந்த ஒன்றே. இதை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார்.
திருமணத்திலிருந்து சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா 2015ல் வெளியான’ 36 வயதினிலே’ படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தற்பொழுது அவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது நடிகை ஜோதிகா முதல் முறையாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘காதல் தி கோர்’ படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குனர் ஜோ பேபி படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்திற்கு மேத்யூ புலிகன் என்பவர் இசையமைத்து வருகிறார்.
நடிகர் மம்முட்டியின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இப்புகைப்படம் சூர்யா – ஜோதிகாவின் திருமணத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்….
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…
காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…
சின்ன மற்றும் ராகுல் தம்பதியினர் தனது 10-வது திருமண நாளை கொண்டாடும் வகையில் திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில்…
இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து. 1980 ஆம் ஆண்டு…
சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகி கலவையான…