ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 24ம் தேதியன்று தன்னுடைய கணவருடன் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகும் அந்த பெண் வீடு திரும்பாததால் அவருடைய கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது கால் துண்டான நிலையில் மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. இது குறித்து காவல்துறை நடத்தி விசாரணையை திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறியதும் பானிபட் அருகே உள்ள ரயில் நிலையம் ஒன்றில் சோகமாக அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒருவர் அவருடைய கணவர் அனுப்பியதாக கூறி அறிமுகமானார். அதன் பிறகு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றின் காலியான பெட்டியில் அந்த பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் இரண்டு பேர் அவரை கூட்டு பலாத்காரம் செய்தார்கள். அதோடு விடாதவர்கள் அவரை ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசி உள்ளார்கள் .அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் பெண்ணின் கால் சிக்கித் துண்டானதாக தெரிவித்துள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…