கார் டிரைவருடன் கள்ளக்காதல்… குழந்தையை அனாதை இல்லத்தில் விட்டுவிட்டு… கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட வங்கி அதிகாரி மனைவி… “50 லட்சம் கொடு, இல்லையேல் பிணமாவாய்” வெளியான பகீர் ஆடியோ ..!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த கர்ணவ் கத்ரி என்ற வங்கி அதிகாரிக்கும், அர்ச்சனா என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜெய்ப்பூரில் பணியாற்றி வரும் தனது கணவரைப் பார்க்க அர்ச்சனா அடிக்கடி கால் டாக்ஸியில் சென்று வந்துள்ளார். அப்போது கார் ஓட்டுநர் ரிஷப் சர்மா என்பவருடன் அர்ச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. காதலனுடன் சேருவதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் நகைகள் மற்றும் ₹5 லட்சம் பணத்துடன் தனது இளைய மகனை மட்டும் கூட்டிக்கொண்டு அர்ச்சனா தலைமறைவானார்.

தனது மனைவியைக் காணவில்லை என கர்ணவ் போலீசில் புகார் அளித்தபோது, அர்ச்சனா பேசிய அதிர்ச்சியூட்டும் ஆடியோ ஒன்றையும் சமர்ப்பித்தார். அதில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ய அர்ச்சனா திட்டம் தீட்டியது அம்பலமானது. கணவரை காரில் அழைத்துச் செல்லும்போதே அவரைத் தீர்த்துக்கட்ட அவர்கள் சதி செய்துள்ளனர். இந்தத் திட்டத்தைக் கேட்டு காவல்துறையினரே மிரண்டு போயுள்ளனர்.

கணவனைக் கொல்லச் சதி செய்தது மட்டுமின்றி, அவருக்கு மிரட்டல் கடிதம் ஒன்றையும் அர்ச்சனா அனுப்பியுள்ளார். அதில், தனக்கு ₹50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும், தவறினால் கணவனையும் அவரது தாயையும் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும், குழந்தைகளை அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு காதலனுடன் வாழப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புகாரை அடுத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அர்ச்சனா மற்றும் அவரது காதலன் ரிஷப் சர்மாவை அதிரடியாகக் கைது செய்தனர்.

Soundarya

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

7 minutes ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

12 minutes ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

15 minutes ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

20 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

24 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

26 minutes ago