உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட வாட்ஸ்அப் செயலி, தற்போது போட்டிகளை எதிர்கொள்ளவும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் ‘வாட்ஸ்அப் பிளஸ்’ (WhatsApp Plus) எனும் புதிய ப்ரீமியம் கட்டண சேவையை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஜிபே, போன்பே போன்ற செயலிகளுக்குப் போட்டியாக பணப் பரிமாற்ற வசதியை அறிமுகம் செய்து வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த புதிய ப்ரீமியம் திட்டத்தின் மூலம் கூடுதல் வருவாயையும் தனித்துவமான அம்சங்களையும் வழங்க மெட்டா முடிவு செய்துள்ளது.
இந்த ப்ரீமியம் சேவையில் பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான முறையில் செயலியை வடிவமைத்துக் கொள்ளும் (Customize) வசதிகள் பிரதானமாக இடம்பெறுகின்றன. குறிப்பாக, செயலியின் ஒட்டுமொத்தத் தோற்றம் (App Theme), நிறம் மற்றும் ஐகான்களை மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்பட உள்ளது. இது சாதாரண வாட்ஸ்அப் பயனர்களுக்குக் கிடைக்காத ஒரு பிரத்யேக அனுபவமாக இருக்கும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும், தொழில்நுட்ப ரீதியாகப் பல மாற்றங்கள் இதில் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக மூன்று சாட்களை (Chats) மட்டுமே ‘பின்’ (Pin) செய்ய முடியும் நிலையில், ப்ரீமியம் சந்தாதாரர்கள் 20 சாட்கள் வரை ‘பின்’ செய்து வைத்துக்கொள்ளலாம். அத்துடன், முக்கிய நபர்களின் அழைப்புகளை எளிதில் அடையாளம் காண தனித்தனி ரிங்டோன்களை அமைக்கும் வசதியும் இதில் உண்டு. தற்போது இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில மாதங்களில் இந்தச் சேவை அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…