ஷங்கர் மகளின் திருமணத்தில் அடாவடி செய்த விஷால்? அதுவும் தமிழக முதல்வர் முன்னிலையில்! என்ன பழக்கம்ண்ணா இது?

By Arun

Published on:

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 15 ஆம் தேதி மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

   

இந்த நிலையில் இத்திருமண விழாவில் நடிகர் விஷாலும் கலந்துகொண்டார். அவர் மணமக்களை பார்ப்பதற்காக காத்திருந்தபோது முதல்வர் ஸ்டாலின் மேடையில் நின்றுகொண்டிருந்தாராம். ஆதலால் ஸ்டாலின் போன்பிறகு விஷாலை மணமக்களை சந்திக்கப் போக சொல்லியிருக்கிறார்கள். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்றும் அங்கிருந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் விஷாலோ “முதல்வர் இருந்தா, நான் போகக்கூடாதா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்தவர்களின் பேச்சை கேட்காமல் முன்னேறி சென்று மணமக்களை பார்த்து வந்தாராம். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

விஷாலும் உதயநிதி ஸ்டாலினும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள். ஆனால் சமீப காலமாகவே விஷால் ரெட் ஜெயண்ட் குறித்து மிக கடுமையாக பேசி வருவதாக செய்திகள் வருகின்றன. மேலும் 2026 ஆம் ஆண்டு தனிகட்சி தொடங்கவுள்ளதாகவும் ஒரு நிகழ்ச்சியில் விஷால் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் விஷால் ஷங்கர் இல்லத் திருமண விழாவில் அப்படி நடந்துகொண்டார் என கூறப்படுகிறது.

author avatar