மும்பையின் முல்லுண்டு புறநகர் இரயில் நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் இறங்கி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரயில்கள் அடிக்கடி வந்து செல்லும் பரபரப்பான தடம் என்பதை சற்றும் பொருட்படுத்தாமல், ஆவேசத்தில் தண்டவாளத்தில் குதித்த அந்த இளைஞர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.
மேலும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், இரயில்வே விதிகளை மீறியும் அரங்கேறிய இந்த மோதல் சம்பவம் அங்கிருந்த பயணிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மோதலின் போது மற்ற பயணிகள் மேடையில் நின்றபடி அவர்களை எச்சரித்தும், அவர்கள் எதையும் காதில் வாங்காமல் சண்டையிடுவதிலேயே குறியாக இருந்தனர்.
A post shared by Parivartan News (@parivartan_news)
“>
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் இரயில்கள் ஏதும் வராததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது இரயில்வே பாதுகாப்புப் படை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொது இடங்களில் இதுபோன்ற அநாகரீகமான மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…