Categories: CINEMA

திமிரு படத்துல வினாயகன் ரோல்ல நடிக்க இருந்தது இவர்தான் … ஆனா வடிவேலு இருந்ததால நடக்கல –தருண் கோபி பகிர்ந்த தகவல்!

தமிழ் சினிமாவில் முதல் படத்தை ஹிட்டாக கொடுப்பது ஒரு இயக்குனருக்கு மிகவும் முக்கியம். அப்படி ஹிட் கொடுத்துவிட்டால் அதன் பின்னர் அவருக்கான வாய்ப்புகள் அமையும். அப்படி திமிரு படம் மூலமாக அறிமுகமானவர்தான் இயக்குனர் தருண் கோபி.

அதன் பிறகு சிம்புவை வைத்து காளை என்ற படத்தை இயக்கினார். அந்த படம் பெரியளவில் ஓடவில்லை. அதன் பின்னர் அடையாளம் தெரியாமல் காணாமல் போனவர் தான் இயக்குனர் தருண் கோபி. அதன் பின்னர் அவர் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். மாயாண்டி குடும்பத்தார் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் இயக்கிய திமிரு திரைப்படம்தான் இப்போது முன்னணி நடிகராக இருக்கும் வினாயகத்துக்கு அடையாளம் கொடுத்த ஒரு படமாக அமைந்தது. அந்த படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தோடு அல்லக்கையாக வந்து வித்தியாசமான நடிப்பைக் கொடுத்திருப்பார் வினாயகன். அதன் பின்னர் அவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகி, இப்போது ரஜினிக்கே வில்லனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

இந்நிலையில் இந்த கதாபாத்திரம் பற்றி தருண் கோபி பேசியுள்ளார். அதில் “முதலில் இந்த கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்புவைதான் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் அவர் ‘வடிவேலு அண்ணன் இருக்குற படத்துல நான் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டார். அதன் பின்னர்தான் வினாயகனைத் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தேன். அவர் முதலில் நடிக்க மறுத்தார். நான்தான் கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தேன்.

அதன் பின்னர் காளை படத்திலும் அவருக்கு ஒரு வேடம் தந்தேன். ஆனால் அதன்பிறகு நானே நடிக்க ஆரம்பித்ததால் அவரோடு நட்பு முறிந்தது. அவருடன் பேசியே பல ஆண்டுகள் இருக்கும். இப்போது அவர் முன்னணி நடிகராக இருப்பது மகிழ்ச்சி” எனப் பேசியுள்ளார்.

 

vinoth

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago