#image_title
பிரபல நடிகரான விக்ரம் கடந்த 1999-ஆம் ஆண்டு ரிலீசான சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ, அந்நியன், தூள், தில், கந்தசாமி ராவணன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் விக்ரம் நடித்துள்ளார். இந்த நிலையில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கலான் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம் தங்கலான் திரைப்படத்திலும் வேறு மாதிரியான கெட்டப்பில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பார்வதி திருவோத்து நடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் பசுபதி, மாளவிகா ஆகியோர் தங்களது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றுள்ளது. திரையரங்குகளில் தங்கலான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விக்ரமின் நடிப்பு எப்போதும் போல சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில தியேட்டர்களில் விக்ரம் போல கெட்டப் போட்டும் ரசிகர்கள் படம் பார்க்க வந்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் விக்ரமும் இயக்குனர் பா.ரஞ்சித்தும் சென்னை தியேட்டருக்கு இரவு நேரத்தில் ரசிகர்களை பார்க்க வந்துள்ளனர். படத்தின் இடைவெளியின் போது விக்ரம் ரசிகர்களுடன் பேசி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திருமணமான பின்னரும் தனது முன்னாள் காதலனுடன் மனைவி உறவைத் தொடர்ந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அந்தரங்க உறுப்பில் மூன்று…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கவுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் ஒருவித…
கோடைக்கால வெப்பத்தைத் தணிக்க ஏசி (AC) இன்றியமையாததாகிவிட்ட நிலையில், அதன் செயல்திறனைத் தக்கவைக்க முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஏசியில்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் நட்சத்திர வேட்பாளரான நடிகர் விஜய்…
பிரயாக்ராஜ் அருகே உள்ள கவுந்தியாரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்வா கலா கிராமத்தில் அனில் திவாரி என்பவர் தனது மனைவி…
மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ள நிலையில்,…