தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு 2015-ஆம் ஆண்டு வெளியான ‘புலி’ திரைப்படத்தின் ஊதியத்தில் 15 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி, வருமான வரித்துறை 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 2015-இல் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், காலக்கெடுக்கூறிய காலவரம்பிற்குப் பின்னரே இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும், வருமான வரித்துறை விதித்த அபராதம் சட்டப்பூர்வமான காலவரம்பிற்குள் தான் அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி அமர்வு, விஜய்யின் வாதத்தை நிராகரித்தது. இந்த தீர்ப்பின் மூலம் வருமான வரித்துறை விதித்த 1.50 கோடி ரூபாய் அபராதம் செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், காலவரம்பு தொடர்பான பிரச்சனையைத் தவிர்த்து, அபராதம் தொடர்பான மற்ற விவரங்கள் குறித்து விஜய் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…