#image_title
ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என அன்புடன் அழைக்கப்படும் அர்ஜுன் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜயின் லியோ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். தற்போது அடுத்தடுத்த முன்னணி கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்து வருகிறார். அர்ஜுன் நடித்த சுதந்திரம், ஜெய்ஹிந்த், ஜென்டில் மேன், ஏழுமலை, மருதமலை உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.ஆக்ஷன் கிங் அர்ஜுன் கடந்த 1984-ஆம் ஆண்டு ரிலீசான நன்றி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக கார்த்திக், உலகில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை ராமநாராயணன் இயக்கியிருந்தார்.
AVM ராஜாவும், புஷ்பலதாவும் இணைந்து நன்றி படத்தை தயாரித்தனர். இந்த படத்தில் கார்த்திக் நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சூப்பர் ஹிட் கன்னட திரைப்படமான தாலியா பாக்கியா படத்தை தமிழில் நன்றி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். முதலில் இந்த படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் கேப்டன் விஜயகாந்த் தான் அழகினார்களாம். ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் அதிக சம்பளம் கேட்டதாக தெரிகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனத்தினர் அந்த படத்தில் நடித்த ஹீரோவை ஏன் தமிழ் படத்தில் நடிக்க வைக்க கூடாது என நினைத்து அர்ஜுனை தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
அதன் மூலம் தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தமிழ் திரை உலகில் என்ட்ரி கொடுத்தார். அதற்கு விஜயகாந்த் பாதை அமைத்துக் கொடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த தகவலை பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…
தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…
சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…