2026-ல் விஜய்தான் முதலமைச்சராக வருவார் என்று முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களமும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தேர்தல் களமே பரபரப்பாக மாறிவிட்டது. சமீபகாலமாகவே அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜயின் கட்சியில் தொடர்ந்து ஐக்கியம் ஆகிய வருகின்றனர். அந்தவகையில் செங்கோட்டையன் நேற்று விஜய் கட்சியின் இணைந்துள்ளார்.
இந்நிலையில் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , ‘தவெக வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. என் உயிர் மூச்சு உள்ள வரை தவெகவிற்காக பணியாற்றுவேன். புனிதமான ஆட்சியை விஜய் கொடுப்பர். தவெகவில் ஜனநாயகம் உள்ளது. எம்ஜிஆரின் அண்ணாயிசம்தான் விஜய்யினுடைய கொள்கை’ என்று தெரிவித்தார்.
கரூர் மரணங்கள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தை நாட திமுக தலைமை…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ்…
பெங்களூருவில் மாடலிங் கனவோடு இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இணையவழி கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும்…
பெரம்பூர் தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் விஜய் ஒரு புதிய பிரத்யேக…
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் அவர்கள்…
மும்பை விமான நிலையத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் அவரது குடும்பத்தினர், விமான நிறுவன…