#image_title
தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித் குமார். திரையில் அவர் வந்தாலே ரசிகர்கள் ஹிஸ்டீரியா வந்தது போல சன்னதம் ஆடுகிறார்கள். இத்தனைக்கும் அஜித் தன்னுடைய ரசிகர் மன்றங்களை எலலாம் கலைத்துவிட்டார். ரசிகர்களை சந்திப்பதையும் நிறுத்திவிட்டார்.
இன்று இவ்வளவு மாஸாக இருக்கும் அஜித் தன்னுடைய திரையுலக ஆரம்பகாலத்தில் தட்டு தடுமாறிதான் முன்னேறினார். இப்போது தன்னுடைய போட்டியாளராக இருக்கும் விஜய்யின் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் அவர் செகண்ட் ஹீரோவாக கூட நடித்துள்ளார்.
விஜய்யுடன் அஜித் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் ஹீரோ விஜய்யின் நண்பராக அஜித் நடித்திருப்பார். தன்னுடைய காதல் தோல்வியால் அஜித் தற்கொலை செய்துகொள்ள விஜய் அந்த பாதிப்பால் காதலில் விழமாட்டேன் என முடிவு செய்து உறுதியாக இருப்பார். அதன் பின்னர் அவர் காதலில் விழுவதும், அதன் பின்னர் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்தான் கதை.
இதன் பின்னர் இருவரும் நேருக்கு நேர் படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது, அஜித்தும் 10 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். ஆனால் அதன் பின்னர் அவர் விலக சூர்யா நடித்தார். அதன் பின்னர் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் நீ வருவாய் என படத்தில் முதலில் அஜித்தும் விஜய்யும்தான் சேர்ந்து நடிப்பதாக இருந்ததாம்.
இதுகுறித்து நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் “முதலில் பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் விஜய்தான் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அஜித் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றதும், அந்த கதாபாத்திரம் பற்றி கேள்விபட்டு ‘நான் அதில் நடிக்கிறேன்’ என்றார். ஆனால் அதற்குள்ளாகவே அஜித்தை அந்த கதாபாத்திரத்துக்கு ஓகே பண்ணிவிட்டோம் என்றதும் அவர் விலகிக் கொண்டார். அப்படிதான் படத்துக்குள் பார்த்திபன் வந்தார்” எனப் பலரும் அறியாத தகவலைக் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமான நடிகை அர்ச்சனா, தற்போது புது கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தமிழ்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா…
சின்னத்திரையில் பிரபலமாக இருந்த நடிகை காவியா அறிவுமணி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில்…
திருமணமான 6 நாளில் சோனாக்ஷி சின்ஹா தனது கணவருடன் மருத்துவமனை சென்ற நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா?…
பிரபல பாடகியான சுசித்ரா எப்போதும் நடிகர் நடிகைகள் பற்றி தனது கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார். கடந்த சில நாட்களுக்கு…
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி திரைப்படம் 3-வது நாளிலும் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.…