காமெடியன், தொகுப்பாளர், நடுவர், நடிகர் என திரையுலகில் பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஈரோடு மகேஷ். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், மேலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.
இவர் சின்னத்திரையில் மட்டும் அல்லாது வெள்ளித்திரையிலும் ‘சிகரம் தொடு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஈரோடு மகேஷ் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ‘அமிழ்தா’ என்ற அழகிய மகளும் உள்ளார். இவர் எப்பொழுது மேடையில் பேசினாலும் தனது வெற்றி பயணத்திற்கு காரணம் மூன்று பெண்கள் தான் என் தாய், மனைவி, மகள் என அடிக்கடி கூறுவார். ஈரோடு மகேசின் தந்தை திரு சந்திரசேகரன், தாயார் திருமதி மீனாட்சி. இவரது தாயாரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில், வருகிற மே 14ஆம் தேதி விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ஈரோடு மகேஷ் அவர்களுக்கு 15 ஆண்டுகள் தொலைக்காட்சியில் நிறைவு செய்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த தருணத்தில் மகேஷ் குடும்பத்தில் இருக்கும் முக்கிய நபர்கள் வந்துள்ளனர்.
அதில் தனது அம்மாவை பார்த்தவுடன் மகேஷ் கண்கலங்கி அழுகிறார்.மகிழ்ச்சியுடன் தனது அம்மாவிடம் அவர் பேசுவதை அழகாக ப்ரோமோவில் காட்டியுள்ளனர். வைரலாகும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…