விஜய் டிவி ஈரோடு மகேஷின் அம்மாவை பாத்துருக்கீங்களா?… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

காமெடியன், தொகுப்பாளர், நடுவர், நடிகர் என திரையுலகில் பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஈரோடு மகேஷ். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், மேலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.

   

இவர் சின்னத்திரையில் மட்டும் அல்லாது வெள்ளித்திரையிலும் ‘சிகரம் தொடு’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஈரோடு மகேஷ் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரீதேவியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ‘அமிழ்தா’ என்ற அழகிய மகளும் உள்ளார். இவர் எப்பொழுது மேடையில் பேசினாலும் தனது வெற்றி பயணத்திற்கு காரணம் மூன்று பெண்கள் தான் என் தாய், மனைவி, மகள் என அடிக்கடி கூறுவார். ஈரோடு மகேசின் தந்தை திரு சந்திரசேகரன், தாயார் திருமதி மீனாட்சி. இவரது தாயாரை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிலையில், வருகிற மே 14ஆம் தேதி விஜய் தொலைக்காட்சி விருதுகள் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ஈரோடு மகேஷ் அவர்களுக்கு 15 ஆண்டுகள் தொலைக்காட்சியில் நிறைவு செய்ததற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த தருணத்தில் மகேஷ் குடும்பத்தில் இருக்கும் முக்கிய நபர்கள் வந்துள்ளனர்.

அதில் தனது அம்மாவை பார்த்தவுடன் மகேஷ் கண்கலங்கி அழுகிறார்.மகிழ்ச்சியுடன் தனது அம்மாவிடம் அவர் பேசுவதை அழகாக ப்ரோமோவில் காட்டியுள்ளனர். வைரலாகும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)