#image_title
பிரபல நடிகரான விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் தான் மகாராஜா படத்தையும் இயக்கியுள்ளார். இதனை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இதில் நடராஜ், முனீஸ் காந்த், சிங்கம்புலி, அனுராக் காஷ்யப், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருக்கும் பூர்ஜ் கலிஃபாவில் மகாராஜா படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. வருகிற 14-ஆம் தேதி படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீ ராம் பாடிய பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது.
இந்த நிலையில் மகாராஜா படக் குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது விஜய் சேதுபதி கூறியதாவது, எனக்கு 21 வயது இருந்த போது துபாய்க்கு வேலைக்கு சென்றேன். குடும்பத்தின் வறுமையை போக்க வேலைக்கு வந்தேன். வெளிநாட்டில் வேலை செய்கிறோம் என்பதற்காக நான் ஜாலியாக இல்லை. வியாழக்கிழமை அனைவரும் ஒன்றாக இணைந்து கறி சமைத்து சாப்பிடுவோம்.
கிரிக்கெட் விளையாடுவோம். 21 வயது இளைஞனுக்கு அங்கு கனவு காண நேரம் இருக்காது. புர்ஜ் கலிஃபாவில் மகாராஜா படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனபோது நான் 21 வயதில் பட்ட கஷ்டங்களை யோசித்துக் கொண்டிருந்தேன். மேலும் 5 ஸ்டார் படத்திற்கும் பாய்ஸ் படத்திற்கும் ஆடிஷனுக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தபோது நான் துபாயில் இருந்தே எனது போட்டோவை அனுப்பினேன் என எமோஷனலாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…
தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…
சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…
தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…