தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். குறிப்பாக, எதிரிகள் மற்றும் தீய சக்திகளிடமிருந்து விடுபடவும், உடல்நலம் மற்றும் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு பெறவும் செய்யப்படும் மிகவும் சக்திவாய்ந்த ‘சத்ரு சம்ஹார பூஜை’யை அவர் அங்கு மேற்கொண்டார். அரசியல் களத்தில் தனக்கு ஏற்படக்கூடிய முட்டுக்கட்டைகளை நீக்கி, வெற்றியை உறுதி செய்வதற்காக இந்தச் சிறப்பு வழிபாட்டை அவர் முதல்முறையாகத் திருச்செந்தூரில் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் பணிகள் முடிந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஓய்வெடுத்து வரும் நிலையில், விஜய் திடீரென இத்தகைய ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சூரசம்ஹார மூர்த்தி சந்நிதியில் முழு ஈடுபாட்டுடன் அவர் நடத்திய இந்த வழிபாடு, வரும் காலங்களில் அவரது அரசியல் நகர்வுகளுக்கான முன்னேற்பாடாகவே பார்க்கப்படுகிறது. தடைகளைத் தகர்த்துத் தலைமைப் பொறுப்பிற்கு வலுவாக வர வேண்டும் என்ற நோக்கில் விஜய் எடுத்திருக்கும் இந்த ஆன்மீக முயற்சி, அவரது தொண்டர்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…