தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எக்ஸிட் போல் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மூன்று முக்கிய வியூகங்கள் (A, B, C) குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. தவெக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விஜய் நேரடியாக முதல்வராகப் பொறுப்பேற்பது முதல் ஆப்ஷனாகவும்; ஒருவேளை அதிமுக மற்றும் தவெக சமமான தொகுதிகளை வென்றால், தவெக தரப்பில் முதலமைச்சர் பதவியையும் அதிமுகவிற்குத் துணை முதல்வர் பதவியையும் விட்டுக்கொடுப்பது இரண்டாவது திட்டமாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, அதிமுக 90 முதல் 100 இடங்களைக் கைப்பற்றி, தவெக குறைந்த இடங்களைப் பெறும் பட்சத்தில், ஆட்சியில் சமபங்கு மற்றும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட அதிகாரப் பகிர்வு குறித்த மூன்றாவது வாய்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடித் திட்டங்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…
தண்ணீரில் குழந்தை ஒன்று அசைவற்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் பீதியடைந்தனர். பதற்றத்துடன் அருகில்…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…