#image_title
தமிழ் சினிமாவில் இன்று நன்கறியப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் விதார்த். இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதலில் இவர் சமையல் காரராக இருந்து தனது என் வாழ்க்கையை தொடங்கினார்.
சினிமா மீது கொண்ட ஆசை காரணமாக சினிமாவுக்கு வந்த இவர் தமிழ் திரையுலகில் 2001ஆம் ஆண்டு முதல் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த இவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அந்த படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்த விதார்த் கவனிக்கப்படும் நடிகரானார். அதன் பின்னர் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. குற்றமும் தண்டனையும், ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் குரங்கு பொம்மை போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.
இவர் நடித்துள்ள அஞ்சாமை எனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் அளித்துள்ள நேர்காணலில் தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி பல அரிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “எங்கப்பா சிங்கப்பூரில் சமையல் காரராக வேலை செய்து கொஞ்சம் சம்பாதித்தார். அதை நான் பைக் வாங்குகிறேன் என்று செலவழித்துவிட்டேன். இன்னும் சொல்லப் போனால் குடித்தே அழித்துவிட்டேன்.
எனக்கு திருப்புமுனையாக அமைந்த மைனா திரைப்படத்தில் முதலில் பரணிதான் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் அதன் பின்னர் எனக்கு வாய்ப்பு வந்தது. அதே போல விஜய் சேதுபதியின் முதல் படமான தென் மேற்குப் பருவக் காற்று முதலில் நான் நடிக்க இருந்த படம். எனக்கு முன்னால் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க பரணிதான் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.” எனக் கூறியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…