#image_title
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு பிரபலத்தில் வீட்டிற்கு சென்று நடிகை வரலட்சுமி தனது திருமண பத்திரிகையை வைத்து வருகின்றார்.
சரத்குமார் மற்றும் சாயாதேவி தம்பதியின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தாரதப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். அதிலும் தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. கதாநாயகியாக மட்டும் இல்லாமல் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கின்றார். சர்கார், சண்டக்கோழி 2 உள்ள திரைப்படங்களின் இவரது வில்லி கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி, ஹனுமான் உள்ளிட திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றிருந்தன. படங்களில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்ய இருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் மும்பையில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது .
தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். வரலட்சுமி சரத்குமாரை இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கின்றார். மேலும் இவர் மும்பையில் ஒரு ஆர்ட் கேலரி ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வருகின்றார். நடிகை வரலட்சுமி-ன் திருமணம் அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி தாய்லாந்தில் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து லீலா பேலஸில் திருமண வரவேற்பு நடைபெறும் எனக் கூறப்படுகின்றது. இதனால் திருமணம் பத்திரிக்கை வைப்பதில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றார் சரத்குமாரின் குடும்பம். ஏற்கனவே ரஜினி, கமல், பிரபு, மணிரத்தினம், பாலா, சித்தார்த், கனிமொழி, மு க ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைத்த நிலையில் தற்போது நடிகை வரலட்சுமி ஏ ஆர் முருகதாஸ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளரான வம்சி படிப்பள்ளி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்களை வைத்து வருகின்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…