#image_title
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றியது வெறும் ஆறே ஆண்டுகள்தான் என்ற போதும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.
1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.
அதற்குக் காரணம் வைரமுத்துவின் பாடல்களில் வார்த்தைகளை இளையராஜா மாற்ற சொன்னதுதான் என்று சொல்லப்படுகிறது. ஒரு பாடலில் மெட்டுக்குப் பொருந்தாத வரிகளை வைரமுத்து வருவதற்கு முன்பாக இளையராஜாவே மாற்றியதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக சொல்லப்படுகிறது.
#image_title
இப்படி தன் வரிகளுக்காக இளையராஜாவிடம் சண்டை போட்டு பிரிந்த வைரமுத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் வந்த பிறகுதான் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அவர் ரஹ்மானுடன் ஆரம்ப காலங்களில் பணியாற்றிய ரோஜா மற்றும் கிழக்குச் சீமையிலே ஆகிய படங்களின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.
அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் ‘கத்தாழங் காட்டுவழி பாடல். அந்த பாடலுக்கு முதலில் வைரமுத்து எழுதிய வரிகள் அவையில்லையாம் “வலது கண்ண விட்டு பிரிஞ்சு போற இடது கண்ணே… என ஆரம்பித்து நீ குருண போட்டு வளத்த கோழி கூட அழுகுதும்மா’ என எழுதியுள்ளார். இந்த வரிகளோடு பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் அவற்றுக்கு வரிகள் பொருந்தவில்லை எனக் கூறியுள்ளார் ரஹ்மான்.
அந்த கருத்தை ஒத்துக் கொண்ட வைரமுத்து அதன் பின்னர் எழுதிய வரிகள்தான் “கத்தாழங் காட்டு வழி… கள்ளிப்பட்டி ரோட்டு வழி” என்ற வரிகள். இந்த தகவலை அப்போது வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த நடிகர் மாரிமுத்து ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…