Categories: CINEMA

இதெல்லாம் மிஸ்டர் சந்திரமௌலி புகழ் சங்கரன் இயக்கியதா?.. பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்தவர் ரா. சங்கரன். ஆனால் அவரை இயக்குனராக அறிந்ததை விட ஒரு நடிகராகதான் ரசிகர்கள் அறிவார்கள்.  குறிப்பாக மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தில் சந்திரமௌலி எனும் கதாபாத்திரத்தில் ரேவதியின் தந்தையாக நடித்திருப்பார்.

அந்த படத்தில் கார்த்திக், ரேவதி மற்றும் இவர் என மூவரும் நடித்த காபிஷாப் காட்சி இன்றளவும் ரசிக்கப்படும் காட்சியாக உள்ளது. அந்த காட்சியில் கார்த்தி பேசும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ எனும் வசனம் எவர்கிரீன் வசனமாக நினைவு கூறப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியால் இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தது.

பெரும்பாலும் பெரிய மனிதர் வேடம், நீதிபதி வேடம், சாந்தமான மனிதர் வேடம் என நடித்து வந்தார். 90 களில் பிஸியான நடிகராக வலம் வந்த சங்கரன் 2000 க்குப் பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அதற்கு வயது மூப்புதான் காரணம் என சொல்லப்பட்டது.

இப்படி நடிகராக அறியப்பட்ட சங்கரன் வெறும் நடிகர் மட்டுமில்லை. அவர் ஒரு இயக்குனரும் கூடதான். . 1974 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு. என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் கால் பதித்தார்.இதை தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, ஒருவனுக்கு ஒருத்தி, தூண்டில், பெருமைக்குரியவள் போன்ற  பல ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

#image_title

இந்த படங்கள் பெரியளவில் வரவேற்பைப் பெறாத காரணத்தால் சங்கரன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அப்படிதான் நடிகராக ‘ஆடிப்பெருக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினர். இவரிடம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய 92 ஆவது வயதில் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களும், கலைஞர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது,.

vinoth

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago