ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவம் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்க்களத்தில் நேரடியாகத் தன் நாட்டு வீரர்களைக் களமிறக்கிக் குருதி சிந்துவதற்குப் பதிலாக, அதிநவீன ரோபோக்கள் மற்றும் தானியங்கி ஆளில்லா இயந்திரங்களை (Drones) வைத்துப் போரிடும் புதிய யுக்தியை உக்ரைன் கையில் எடுத்துள்ளது. கட்டுப்பாட்டு மையங்களில் அமர்ந்திருக்கும் உக்ரைனிய ராணுவ கமாண்டோக்கள், கணினித் திரைகள், லைவ்ஸ்ட்ரீம்கள் மற்றும் ட்ரோன் காட்சிகள் மூலமாகத் தொலைதூரத்திலிருந்தே இந்த இயந்திரத் தாக்குதல்களை மிகத் துல்லியமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கி, 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த உக்கிரமான போரினால் உக்ரைன் ஏற்கனவே பெரும் உயிர்ச்சேதங்களையும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்துள்ளது. ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடான உக்ரைனுக்கு, மேற்கொண்டு தன் நாட்டு வீரர்களை இழப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, மனித உயிர்களைக் காக்க வேண்டிய கட்டாய அவசியத்தின் காரணமாகவே, உக்ரைன் ராணுவம் இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை முழுமையாகச் சார்ந்து இயங்கத் தொடங்கியுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இந்த உக்ரைனிய ரோபோக்கள் மிகவும் அமைதியாக நகரும் திறன் கொண்டவை. அவை எதிரிகளின் நிலைக்கு மிக அருகே, அதாவது சுமார் 10 மீட்டர் தூரம் வரும் வரை ரஷ்ய வீரர்களால் அதன் சத்தத்தைக் கூடக் கண்டுபிடிக்க முடிவதில்லை. இந்த ரகசியத் தன்மையால் திகைத்துப் போயிருக்கும் ரஷ்ய வீரர்கள், இதற்கு ‘சைலண்ட் டெத்’ (Silent Death) என்று பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 35,000 ரஷ்ய வீரர்களுக்கு உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படுத்துவதையே இலக்காகக் கொண்டு இந்தத் தானியங்கி ஆயுதங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றங்களால், உக்ரைன் மீதான உலக நாடுகளின் கவனம் சற்று மாறியுள்ள சூழலில், இந்தத் தற்சார்பு தொழில்நுட்பம் உக்ரைனுக்குப் பெரும் பக்கபலமாக மாறியுள்ளது. “போரின் தொடக்கத்திலேயே இத்தகைய ரோபோ ஆயுதங்கள் கிடைத்திருந்தால் இன்னும் பல உக்ரைனிய வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்” என்று அந்நாட்டின் ராணுவத் தளபதிகள் உருக்கமாகத் தெரிவிக்கின்றனர். கத்தியின்றி, ரத்தமின்றி என்பது போலத் தன் நாட்டு வீரர்களின் ரத்தம் சிந்தாமல் எதிரியைத் திணறடிக்கும் உக்ரைனின் இந்த யுக்தி, உலகப் போர் வரலாற்றில் ஒரு முக்கியப் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…