2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதாகவும், விரைவில் புதிய கட்சிகள் இணைய உள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சில முக்கிய கட்சிகளுடன் தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், அந்த கட்சிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை உருவாக்குவதில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, திமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவதாக எழுந்த புகார்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தச் சூழலில், தேமுதிக மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதை இபிஎஸ் தனது பேச்சின் மூலம் சூசகமாக உணர்த்தியுள்ளார். கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள இந்தக் கட்சிகளை ஒன்றிணைப்பதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது.
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…
தண்ணீரில் குழந்தை ஒன்று அசைவற்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் பீதியடைந்தனர். பதற்றத்துடன் அருகில்…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…