தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயின் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கிய பிறகு அவருக்கு பல கட்சிகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் நிலையில் விஜய் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். அதேசமயம் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் கட்சியில் இருந்து விலகி பலரும் மாற்று கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். ஆனால் நடிகர் விஜய் தனது கட்சியை பலப்படுத்த பல முயற்சிகளை கையில் எடுத்துள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வில் குன்றத்தூர் மற்றும் மணிமங்கலம் பகுதிகளை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 150 பேரும், தமிழக வெற்றி கழகம் கட்சியை சேர்ந்த 40 முக்கிய நிர்வாகிகளும் திமுகவில் இணைந்துள்ளன. இந்த நிகழ்வு அந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. புதிதாக கட்சியில இணைந்த நிர்வாகிகளுக்கு காஞ்சிபுரம் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அன்பரசன் சால்வை அணிவித்து வரவேற்றார். நாளுக்கு நாள் திமுகவின் பலம் கூடிக் கொண்டே வரும் நிலையில் தற்போது கட்சி நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி உள்ளது விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…