சிதம்பரம், லாட்டரி விற்பனை விவகாரத்தில் எஸ்.பி வெழுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமுல் வாங்குபவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடலாம் என்று கூறியுள்ளார். அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை நசீர் (56) என்பவர் சிதம்பரத்தில் விற்று வருவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் பேரில் தனிப்படை கொண்டு போலீசார் நசீரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் கடைநிலை காவலர்கள் என பலரும் லட்சக்கணக்கில் மாமுல் வாங்கியது தெரியவந்துள்ளது. மாமுல் விவகாரத்தில் சிக்கிய சிதம்பரம் டிஎஸ்பி, லாமேக், இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு உட்பட ஏழு பேர் வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருதாச்சலம், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகாரிகளை அழைத்து எஸ்பி ஜெயக்குமார் பேசிய போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. பல வருடங்களாகவே லாட்டரி டிக்கெட் விற்பனை நடந்து கொண்டு உள்ளதாகவும். அதன் மூலம் போலீசார் மாமுல் வசூலிப்பது தொடர்ந்து நடந்து வந்ததாகவும் தகவல் வெளியாகிறது. இதில் சில அதிகாரிகள் மட்டும் நேர்மையாக பணியாற்றி வருகின்றனர். லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனைக்கு மாமுல் வாங்குபவர்கள் பிச்சை எடுப்பதற்கு சமம். பிச்சை எடுத்து சாப்பிடலாம் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். போலீசாரை, எஸ்.பி இப்படி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…