திடீர் திருப்பம்… சர்ச்சை பேச்சு முதல் நீதிமன்ற தடை வரை… முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

Spread the love

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொன்முடிக்கு எதிராக பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மேலும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில், பொன்முடி நேரில் ஆஜராகுமாறு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அண்மையில் சம்மன் அனுப்பியிருந்தது. இந்தச் சம்மனையும், வழக்கையும் ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, இத்தகைய புகார்களில் வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாகப் புகார் அளித்த உமா ஆனந்தன் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இந்தத் தீர்ப்பு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு ஒரு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.

Rajeshwari

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

4 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

4 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

4 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

5 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

5 மணத்தியாலங்கள் ago