தெலுங்கானா, சைபராபாத் ஐடி மைதானத்தில் ஸ்வான் லேக் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ரேணு அகர்வால் என்ற பெண் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த பத்தாம் தேதி வழக்கம் போல் கணவர் மற்றும் 26 வயது மகன் இருவருமே வேலைக்குச் சென்று விட்டனர். வேலைக்குச் சென்றவுடன் கணவன் மகன் என மாறி மாறி ரேணுகாவிற்கு கால் செய்துள்ளனர். போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த இருவரும் முன்கூட்டியே வீட்டிற்கு வந்தனர். கதவு உள்பக்கம் தாக்கல் போட்டிருந்ததால் மெக்கானிக்கை வர சொல்லி கதவைத் திறந்து உள்ளே சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. ரேணு கைகால்களை கட்டப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். காவல்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
வீட்டு வேலை பார்த்து வந்த ஹர்ஷா, 14 வது மாடியில் ஒரு வீட்டில் வேலை செய்யும் ரவுசனும் ரேணுகாவின் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பத்து நாட்களுக்கும் ஹர்ஷா ரேணுகாவின் வீட்டிற்கு வேலைக்கு சேர்த்துள்ளார். மற்றொரு வீட்டில் வேலை செய்யும் ரவுஷன் இருவரும் ரேணுகாவை கண்காணித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று ரேணு தனியாக இருந்ததால் வீட்டில் கொள்ளையடித்த நினைத்துள்ளனர். வீட்டுக்குள் நுழைந்த ரேணுவின் கை கால்களை கட்டி விட்டு பிரஷர் குக்கரை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்பு வீட்டில் இருந்த கத்தி கத்திரிக்கோலை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு. வீட்டில் நிதானமாக குளித்துவிட்டு 40 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் என அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பித்து ஓடி விட்டனர். இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு சென்று இருக்கலாம் என்ற காவல்துறையினர் சந்தேகித்து தேடி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…