ராஜஸ்தானின் அஜ்மீரில் பெண் ஒருவர் தனது 3 வயது மகளைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, அஞ்சலி பிரியாசிங்(28) என்ற பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி 3 வயதில் ஒரு குழந்தை இருந்துள்ளது. அஞ்சலி அஜ்மீரில் உள்ள ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிகிறார். அங்கு அவரது பார்ட்னர் அல்கேஷ் குப்தாவும் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் லிவிங்க் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் முதல் திருமணத்தில் ஒரு மகள் இருந்ததற்காக அவரது லிவ்-இன் பார்ட்னரால் பலமுறை கேலி செய்யப்பட்டு வந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு தனது மகளை அஜ்மீரின் அனா சாகர் ஏரியில் வீசியுள்ளார். அப்போது வழக்கமான ரோந்துப் பணியின் போது, தலைமைக் காவலர் கோவிந்த் சர்மா, வைஷாலி நகரிலிருந்து பஜ்ரங் கர் நோக்கிச் செல்லும் சாலையில் நடந்து செல்லும் தம்பதியினரை சந்தித்தார். விசாரித்தபோது, அஞ்சலி தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், ஆனால் குழந்தை திடீரென வழியில் காணாமல் போனதாகவும் கூறினார். இரவு முழுவதும் சிறுமியைத் தேடியதாகவும், ஆனால் எந்தப் பலனும் இல்லை என்றும் தம்பதியினர் தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், அஞ்சலி தனது மகளை தண்டவாளத்தில் இருந்த இடைவெளி வழியாக ஏரிக்குள் தள்ளிவிட்டதாக ஒப்புக்கொண்டார். பின்னர் குழந்தையின் உடல் ஏரியிலிருந்து மீட்கப்பட்டது. விசாரணையில் அஞ்சலி தனியாக செயல்பட்டது தெரியவந்தது. குழந்தை காணாமல் போனது குறித்து அதிகாலை 2 மணியளவில் அல்கேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அல்கேஷ் தனது முந்தைய திருமணத்தில் குழந்தை பெற்றிருப்பதாக கிண்டல் செய்து வந்ததாகவும், அதுவே தன்னை இந்தக் குற்றத்தைச் செய்யத் தூண்டியதாகவும் அஞ்சலி போலீசாரிடம் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…