பிரபல காமெடி நடிகரான சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல் நலக்குறைவால் தற்பொழுது இயற்கை எய்தி உள்ளார்.
‘பூந்தோட்டம்’ எனும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் திரை உலகில் கால் பதித்தவர் நடிகர் சிவ நாராயணமூர்த்தி. இவர் தமிழ் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை நடிகரும் இயக்குனருமான விசு தமிழ் திரை உலகில் அறிமுகப்படுத்தினார்.
விவேக் மற்றும் வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றார். முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் ,அஜித் போன்ற நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். காமெடியான போலீஸ் கதாபாத்திரங்கள் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருபவர் நடிகர் சிவ நாராயணமூர்த்தி தான்.
தமிழ்நாடு போலீஸ் தொப்பையை பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டாமா என விவேக் இவரை வைத்து செய்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது தான். நடிகர் சிவ நாராயணமூர்த்தி புஷ்பவல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு லோகேஷ், ராம்குமார் இன்று இரண்டு மகன்களும், ஸ்ரீதேவி என்ற ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு இறந்துள்ளார் நடிகர் சிவ நாராயணமூர்த்தி. தற்போது இவரின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நடைபெறும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இவரது இறப்பு பற்றிய செய்தி அறிந்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…