சமூக ஊடகங்களில் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, இது நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், ஒரு நபர் “வேடிக்கையான ரீல்” செய்வதற்காக உயிருள்ள மீனின் வாயில் பார்பிக்யூ சாஸை ஊற்றி அந்த மீனை கொடுமைப்படுத்துகிறார்.
வைரலான காட்சிகளில், அந்த மனிதன் ஒரு குளத்தின் அருகே நின்றுகொண்டு, தனது கூட்டாளியுடன் சேர்ந்து படமெடுப்பதைக் காணலாம். அவன் ஒரு உயிருள்ள மீனை வெறும் கைகளால் பிடித்து, அதன் வாயை வலுக்கட்டாயமாக பிளந்து , உள்ளே ஒரு பார்பிக்யூ சாஸ் பாட்டிலை ஊற்றுகிறான். இதனையடுத்து மீன் உயிருக்குப் போராடுவது தெளிவாகத் தெரிகிறது. பின்னர் அந்த மனிதன் மீனின் உடலில் கூடுதல் சாஸை ஊற்றி, அதை ஒரு தயாரிக்கப்பட்ட உணவைப் போல மாற்றி, அதை மீண்டும் தண்ணீரில் வீசுகிறான். ஆன்லைனில் பலர் அந்த மனிதனின் செயல்களை “தேவையில்லாத காட்டுமிராண்டித்தனம்”, “இதயமற்றது” மற்றும் “அருவருப்பானது” என்று கண்டித்து வருகின்றனர்.
கோடைக்காலத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசு காரணமாக முகத்தில் எண்ணெய் வழிதல் மற்றும் முகப்பருக்கள் ஏற்படுவது…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்…
இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிக்கப்போகும் ஒரு மகா யுத்தத்தின் தீர்ப்பு நாளாக இன்று மே 4, 2026 அமைந்துள்ளது. தமிழ்நாடு,…
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…
வேத ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது எப்போதும் பின்னோக்கியே சஞ்சரிப்பவை. அந்த வகையில், வரும் மே 29-ஆம்…
இந்தியாவின் பயிற்சி மையங்களின் தலைநகராக அறியப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், மாணவர் விடுதி ஒன்றின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில்…