உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் குடிநீர் தொடர்பான சிறு தகராறில் காதலன் தனது காதலியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேலி சிட்டி ரயில் நிலையம் அருகே காச்கஞ்ச் – ராம்நகர் பயணிகள் ரயிலில் பயணம் செய்தபோது, போபாலைச் சேர்ந்த ருக்ஷானா என்பவருக்கும் அவரது காதலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ருக்ஷானா, “நான் ரயிலில் இருந்து குதித்துவிடுவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற காதலன், அவரே ருக்ஷானாவை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் இருந்து கீழே விழுந்த ருக்ஷானா, தண்டவாளத்தில் சிக்கி உடல் இரண்டு துண்டுகளாகப் பிளந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஜிஆர்பி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில், காதலன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ருக்ஷானா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தவர் என்பதும், கடந்த சில காலமாக பரேலியில் வாடகை வீட்டில் தங்கி இந்த இளைஞருடன் வசித்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…