தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சாவித்திரி. இவர் முதன் முதலில் பாதாள பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார். பிறகு கல்யாணம் பண்ணிப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த சாவித்திரி ஜெமினிகணேசனுடன் காதலில் விழுந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும் அந்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் தயாரிப்பாளராக மாறினார். அதன்படி 1971 ஆம் ஆண்டு ப்ராப்தம் என்ற திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியடைந்ததால் இதுவே அவரது கடைசி படமாக அமைந்தது. இந்த நிலையில் நடு இரவில் கொள்ளையர்களை சாவித்திரி சாமர்த்தியமாக சமாளித்த ஒரு சம்பவத்தை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதாவது மைசூரில் படப்பிடிப்புக்காக நான் மற்றும் நடிகைகள் சிலரை அழைத்துக் கொண்டு சாவித்திரி அக்கா காரை ஓட்டிக்கொண்டு சென்றார். ஸ்ரீஹரி செல்லும்போது நடுரோட்டில் யானைக் கூட்டம் வந்ததால் காரை பின்னோக்கி எடுத்துச் சொல்லும் போது பத்து கொள்ளையர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் எந்தவித பயமும் இல்லாமல் காரை விட்டு இறங்கி சென்ற சாவித்திரி அக்கா, நான் ஒரு நடிகை உங்களுக்கு தெரியாதா? உங்களை மகிழ்விக்க தான் நடிப்பதற்காக நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் தான் உள்ளது வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதன் பிறகு கொள்ளையர்கள் அனைவரும் அவரிடம் சகஜமாக பேசிவிட்டு அந்த காட்டை கடந்து செல்லும் வரை யானைகளை விரட்டி விட்டு எங்களுடன் பாதுகாப்பாக வந்தனர் என்று சாவித்திரியின் சாமர்த்தியத்தை குட்டி பத்மினி பகிர்ந்து உள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…