இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என்று அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். மேலும் இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறியிருக்கிறார். டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்கினிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அமித்ஷா. அப்போது பேசிய அவர், “நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டில் ஒரு சமூகம் ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தூரம் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் இங்கே உருவாகும். அவர்கள் தான் இந்த நாட்டில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள்.
நம்முடைய நாட்டின் மொழிகள் நம்முடைய கலாச்சாரத்தின் ரத்தினங்கள். மொழிகள் இல்லாமல் உண்மையான இந்தியர்கள் இல்லை. ஒரு அந்நிய நாட்டு மொழியில் நம்முடைய வரலாறு, கலாச்சார மதத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. போர் எவ்வளவு கடினம் என்பதை நமக்கு நன்றாகவே தெரியும். இந்திய சமூகம் இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நம்முடைய மொழிகளில் பெருமையோடு நாம் இந்த நாட்டை வழி நடத்துவோம். சித்தாந்தப்படுத்துவோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம். இந்த உலகை ஆள்வோம். இது குறித்து யாரும் சந்தேகப்பட தேவையில்லை என்று கூறியிருக்கிறார் .
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக…
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' திரைப்படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற பொன்வேல், தற்போது தமிழக பிளஸ் 2…
சேலம் மாவட்டம் சன்னியாசி குண்டு பகுதியில் சொத்து தகராறில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச்செயலாளர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அடுத்தது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல்…
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படுவது ஒரு மரபாகவே இருந்து வரும் நிலையில், தற்போது தி.மு.க.…