தமிழகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை MCQ என்ற மல்டிபிள் சாய்ஸ் கொஸ்டின்ஸ் முறையில் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. தமிழக உயர்கல்வி துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 32 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், 401 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இந்த கல்லூரிகளில் படிக்கக்கூடிய இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவியருக்கு எலக்ட்ரானிக்ஸ், சிவில் மற்றும் மெக்கானிக்கல் உட்பட தொழில்துறை சார்ந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து செமஸ்டர் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு எழுத்து தேர்வை குறைத்து செய்முறை பயிற்சிகளுக்கு அதிக அளவு முக்கியத்துவம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் நடக்கும் செமஸ்டர் தேர்வில் மாணவர்களுக்கு எழுத்து தேர்வாக இல்லாமல் MCQ முறையில் அதாவது ஒரு கேள்விக்கு ஒரு பதில் வழங்கப்பட்டு அதில் சரியான பதிலை தேர்வு செய்யும் முறையில் கேள்வித்தாள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் என கேள்விகள் இடம்பெறும். இதைத் தவிர குறுகிய பதில்கள் அளிக்கும்படி சில கேள்விகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…