டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர். அவரது அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. சிறந்த பேச்சுத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் மனதில் பட்டதை பொதுவெளியாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆதலால் சில நேரங்களில் அவர் பேசியது சர்ச்சையை உண்டு செய்துவிடும்.
இந்த நிலையில் 1990களில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ஒரு முறை ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம். இந்த செய்தியை கேள்விபட்டவுடனே டி.ராஜேந்தர் தனது உதவியாளரை அழைத்து ரஜினிக்கு ஃபோன் செய்யுமாறு கூறினாராம்.
அக்காலகட்டத்தில் டெலிஃபோன் டிக்சனரியில் அனைத்து நடிகர்களின் டெலிஃபோன் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆதலால் ரசிகர்கள் யாராவது “நாங்கள் கமல்ஹாசன் ஆஃபிஸில் இருந்து பேசுறோம். ரஜினியிடம் ஃபோனை கொடுங்கள்” என்று பொய் சொல்லி ரஜினியிடம் பேச முயல்வார்களாம். ஆதலால் “உங்கள் நம்பரை சொல்லுங்கள். ரஜினி சாரிடம் கேட்டுவிட்டு நாங்களே திரும்ப அழைக்கிறோம்” என்று ரஜினிகாந்தின் உதவியாளர்கள் ஃபோனை கட் செய்துவிடுவார்களாம்.
அதன் பின் திரும்ப அழைத்து நிஜமாகவே அந்த நடிகர் அழைத்திருந்தால் பேசுவார்களாம். ரசிகர்கள்தான் இப்படி செய்கிறார்கள் என்று தெரிந்தால் கட் செய்துவிடுவார்களாம். டி.ஆர். ஃபோன் செய்ய சொன்னபோது அவருக்கு இதுதான் நடந்தது.
அதாவது டி.ராஜேந்தரின் உதவியாளர் ரஜினிகாந்திற்கு ஃபோன் செய்ய, அந்த பக்கம் ரஜினிகாந்தின் உதவியாளர் ஃபோனை எடுத்தார். “நாங்க டி.ராஜேந்தர் சார் ஆஃபிஸ்ல இருந்து பேசுறோம். ரஜினி சார் கிட்ட ராஜேந்தர் சார் பேசனும்ன்னு சொல்றார்” என்று டி.ஆரின் உதவியாளர் கூறியிருக்கிறார்.
அதற்கு ரஜினிகாந்தின் உதவியாளர், “நாங்கள் திரும்ப அழைக்கிறோம்” என்று கூறி கட் செய்துவிட்டார்களாம். அதன் பின் டி.ராஜேந்தரின் ஃபோன் அலறியிருக்கிறது. டி.ராஜேந்தரின் உதவியாளர் ஃபோனை எடுத்து “ஹலோ, யாரு?” என்று கேட்க, “நான் ஏவிஎம் சரவணன் பேசுறேன். டி.ராஜேந்தர் சார் கிட்ட பேசனும்” என்று அந்த பக்கம் கூறியிருக்கிறார்கள்.
ரஜினிகாந்தின் ஃபோன் கால்-ஐ எதிர்பார்த்துக்கொண்டிருந்த டி.ராஜேந்தரனுக்கு ஏவிஎம் சரவணனிடம் ஃபோன் வந்தது குழப்பமாக இருந்திருக்கிறது. டி.ஆர், ஃபோன் ரிசீவரை வாங்கி, “ஹலோ” என்று சொல்ல, அந்த பக்கம், “டி.ஆர் சார், நான்தான் ரஜினி பேசுறேன்” என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
இதனை கேட்டவுடன் டி.ராஜேந்தருக்கு கோபம் தலைக்கேறிவிட்டதாம். “ரஜினி, எனக்கு இதெல்லாம் பிடிக்காது. ஏன் ஏவிஎம் சரவணன்னு பொய் சொன்னீங்க. இந்த வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காதீங்க. வைங்க ஃபோனை” என்று கத்திவிட்டு டி.ஆர். கட் செய்துவிட்டாராம்.
அதன் பின் ரஜினிகாந்திடம் இருந்து நான்கு முறை அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் டி.ராஜேந்தர் ஃபோனை எடுக்கவே இல்லையாம். அதன் பின் கோபம் தணிந்த பிறகுதான் ரஜினிக்கு ஃபோன் செய்து நலம் விசாரித்தாராம் டி.ராஜேந்தர்.
நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…
நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…
பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…