அடுத்த அதிரடி….. இனி இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1500… ஸ்டாலின் கொடுத்த ‘மெகா’ சர்ப்ரைஸ்….!

Spread the love

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் நிதி வசதியற்ற திருக்கோயில்களின் முன்னேற்றத்திற்காகவும், அங்கு பணிபுரியும் அர்ச்சகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் உள்ள அர்ச்சகர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகையை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளார். விலைவாசி உயர்வு மற்றும் அர்ச்சகர் குடும்பங்களின் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவு, ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுள்ளோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் 1,000 புதிய திருக்கோயில்களை இணைத்ததன் மூலம், தற்போது மொத்தம் 19,000 கோயில்கள் பயன்பெற உள்ளன. இதற்காக 25 கோடி ரூபாய் அரசு நிதியை வைப்பு நிதியாக முதலீடு செய்ய முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். அர்ச்சகர்களின் நலன் காப்பது மட்டுமின்றி, அவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக தலா 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை சுமார் 1,500 மாணவ, மாணவியர் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில்களில் முறையான பூஜைகள் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், 19,000 கோயில்களுக்கு சுமார் 8.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பித்தளை தாம்பாளம், தட்டு, மணி, காமாட்சி விளக்கு மற்றும் பஞ்சபாத்திரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் தலா 4,515 ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தக் கோயில்களின் மின்கட்டணச் சுமையைக் குறைக்கும் வகையில் 6 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தொடக்கம் முதலே ஒருகால பூஜை திட்டத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் தமிழக அரசு, அத்திட்டத்திற்கான வைப்பு நிதியை 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை இத்திட்டத்திற்காக மட்டும் 335 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில் சொத்துக்களை மீட்பது மற்றும் திருப்பணிகளை மேற்கொள்வதுடன், அர்ச்சகர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதன் மூலம் ஆன்மீக விழுமியங்களை தமிழக அரசு பாதுகாத்து வருவதாக இந்த அறிவிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

Nanthini

Recent Posts

“குப்பை கொட்டப்போறேங்க”… கணவரிடம் சொன்ன கடைசி வார்த்தை… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப்…. பரபரப்பு பின்னணி…!!!

பெங்களூரு பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் - பிரியா தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

2 minutes ago

பெங்களூருவில் பகீர்…! இஸ்லாமிய இளைஞரை “தீவிரவாதி” என வசைபாடிய தம்பதி…. வீட்டை முற்றுகையிட்ட மக்கள்…! பகீர் வீடியோ…!!

பெங்களூரு அபிகெரே பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி, ஒரு இஸ்லாமிய இளைஞரை நோக்கி இனவெறி மற்றும்…

4 minutes ago

“சோப்பு போட்டாலும் போகாது.. பெட்ரோல் ஊற்றினாலும் அழியாது”… தேர்தல் மை பற்றி பலரும் அறியாத அதிர்ச்சியூட்டும் ரகசியம்…!

தேர்தல் களத்தில் ஜனநாயகத்தின் நேர்மையை நிலைநாட்டும் ஒரு வலிமையான அறிவியல் ஆயுதமாக இந்த "அழியாத மை" (Indelible Ink) திகழ்கிறது.…

9 minutes ago

உங்க ஓட்டு கள்ள ஓட்டாயிருச்சா?.. தேர்தல் ஆணையத்தின் ரகசிய விதி…. டெண்டர் ஓட்டு பற்றி தெரிஞ்சிக்கோங்க… கள்ள ஓட்டுக்கு செக் வைக்கும் ஒரே ஆயுதம்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…

18 minutes ago

அடடே சூப்பர்!… சாக்லேட் கொடுத்து ஓட்டு போட அழைத்த ரோபோ… கோவையில் களைகட்டும் தேர்தல் களம்…!!!

தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…

21 minutes ago

இப்போவே ரிசல்ட் முடிவாகிடுச்சா?… 2026 தேர்தலில் தமிழகப் பெண்கள் எடுத்த அந்த ஒரு அதிரடி முடிவு.. சத்தமின்றி வாக்குச்சாவடிகளில் திமுக செய்த சம்பவம்….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை 2026-ஆம் ஆண்டு தேர்தல் பதிவு செய்துள்ளது.…

30 minutes ago