வைஷ்ணவி முதல் சித்ரா வரை… தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள்… யார் யார் தெரியுமா..??

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் அடிக்கடி நடிகர் நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் சிலரின் மரணம் என்றும் மறவாமல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன்படி தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வைஷ்ணவி:

கடந்த 2006 ஆம் ஆண்டு சன் டிவி புகழ் வைஷ்ணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் விசில் மற்றும் பாபா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. திருமணமான சீரியல் நடிகர் ஒருவர் இவரை காதலித்து ஏமாற்றி விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சோபனா:

சின்னத்திரையில் காமெடி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவுக்கு அக்காவாகவும் வடிவேலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சபர்ணா:

சின்னத்திரை நடிகை ஆன இவர் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். அதேசமயம் காளை மற்றும் பூஜை உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் இவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சாய் பிரசாந்த்:

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இவர் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்பட்டது.

சித்ரா:

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தனிப்பட்ட சில காரணங்களால் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

4 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

4 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

5 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago