விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை பிரியங்கா. இவர் சீரியலில் மிகவும் ஹோம்லியாக, அடக்க ஒடுக்கமாக நடிக்கும் பிரியங்கா நிஜத்தில் மிகவும் மாடலாக உடை அணியக் கூடியவர்.
நடிகை பிரியங்கா குமார் கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் பிறந்து வளர்ந்தவர்.தனது பள்ளி படிப்பை மைசூரில் முடித்தார். மாடலிங் துறையின் மீது கொண்ட ஆசை காரணமாக தொடர்ந்து மாடலிங் செய்து வந்தார். இவர் முதன்முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தமிழில் ‘சாக்லேட்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.
இவர் ஒரு சில சீரியல்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், இவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது ‘காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா’ கதாபாத்திரம் தான். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார்.
அதனால் தற்பொழுது இவருக்கு கன்னடத்தில் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘Bad Manners’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளாராம். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூற ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
சின்னத்திரை நடிகை வைஷ்ணவி சுந்தர் தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் டி ராஜேந்தர். சினிமாவில் வெற்றி காண்பது என்பது மிகப்பெரிய விஷயம்.…
ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ஐயா. இந்த திரைப்படத்தில்…
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.…