விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை பிரியங்கா. இவர் சீரியலில் மிகவும் ஹோம்லியாக, அடக்க ஒடுக்கமாக நடிக்கும் பிரியங்கா நிஜத்தில் மிகவும் மாடலாக உடை அணியக் கூடியவர்.
நடிகை பிரியங்கா குமார் கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் பிறந்து வளர்ந்தவர்.தனது பள்ளி படிப்பை மைசூரில் முடித்தார். மாடலிங் துறையின் மீது கொண்ட ஆசை காரணமாக தொடர்ந்து மாடலிங் செய்து வந்தார். இவர் முதன்முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தமிழில் ‘சாக்லேட்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.
இவர் ஒரு சில சீரியல்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும், இவருக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது ‘காற்றுக்கென்ன வேலி வெண்ணிலா’ கதாபாத்திரம் தான். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது மாடர்ன் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார்.
அதனால் தற்பொழுது இவருக்கு கன்னடத்தில் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘Bad Manners’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா கமிட்டாகியுள்ளாராம். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூற ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…