“செந்தில் பாலாஜின்னா சும்மாவா?… 4:40 மணிக்கு நடந்த பரபரப்பு”.. 20 நிமிடத்தில் மாறிய அரசியல் கணக்கு… கொங்கு மண்டலத்தை அதிர வைக்கும் திமுக….!

Spread the love

தமிழக அரசியலில் ‘கொங்கு மண்டலத்தின் சாணக்கியர்’ என்று அறியப்படும் செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ள நிலையில், தனது கோட்டையான கரூரையும் தனது பிடிக்குள்ளேயே வைத்திருக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். கரூரில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தியாகராஜன் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது வேட்புமனுவில் பிரமாணப் பத்திரம் இல்லாததால் அது நிராகரிக்கப்படலாம் என்ற சூழல் நிலவியது. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தத் திட்டமிட்ட செந்தில் பாலாஜி, தனது தம்பி அசோக்கை கரூரில் மாற்று வேட்பாளராக அனைத்து ஆவணங்களுடனும் தயார் நிலையில் வைத்திருந்தார்.

இந்த அரசியல் சதுரங்கத்தின் அடுத்த கட்டமாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கும் மாற்று வேட்பாளராக அசோக்கே மனுத் தாக்கல் செய்துள்ளார். அதாவது, ஒரே நேரத்தில் அண்ணனுக்காக கோவையிலும், அண்ணனின் ஆதரவாளருக்காக கரூரிலும் மாற்று வேட்பாளராக அசோக் களம் இறங்கியுள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒருவேளை கரூரில் தியாகராஜனின் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டால், அங்கு அசோக் திமுகவின் முதன்மை வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக மாறுவார்; அதே சமயம் கோவையில் தனது மாற்று வேட்பாளர் மனுவை அவர் வாபஸ் பெற்றுவிடுவார்.

கரூரில் தனது ஆதரவாளர் வெற்றி பெற்றால், பிற்காலத்தில் அவர் தனக்கென ஒரு தனி அரசியலை உருவாக்கித் தனக்கு விசுவாசமாக இருக்காமல் போய்விடுவாரோ என்ற தொலைநோக்குச் சிந்தனை செந்தில் பாலாஜிக்கு இருந்ததாகத் தெரிகிறது. சொந்தக் குடும்ப உறுப்பினரே அங்குப் போட்டியிடுவது தனது அரசியல் ஆதிக்கத்தைத் தக்கவைக்கப் பாதுகாப்பானது என அவர் கருதியிருக்கலாம். இந்த அதிரடி நகர்வுகள் அனைத்தும் திமுக தலைமையின் ஒப்புதலோடுதான் நடக்கிறதா அல்லது இது செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட வியூகமா என்ற முணுமுணுப்புகள் கட்சியினரிடையே எழுந்துள்ளன.

மறுபுறம், இந்தத் தகவல் அதிமுக மற்றும் பாஜக தரப்புக்குக் கசிந்த நிலையில், இதனைப் பெரிய சர்ச்சையாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இந்த நெருக்கடியை உணர்ந்த தியாகராஜன், மனுத் தாக்கலுக்குக் கடைசி நாளான நேற்று மாலை 5 மணி முடிவதற்குச் சற்று முன்பாக, 4:40 மணிக்கு அவசரமாகத் தனது பிரமாணப் பத்திரத்தை ஆன்லைனில் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் ஆரம்பக்கட்டத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது இதுவும் ஒரு தற்காப்பு வியூகமா என்பது இன்று நடக்கும் மனுப் பரிசீலனையில் தெளிவாகிவிடும். கரூரின் அரசியல் களம் அண்ணன் – தம்பி வசம் செல்லுமா என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்குகிறது.

Nanthini

Recent Posts

வரும் 7 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும்… தவெக தலைவர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…

4 minutes ago

ரிலீஸ்க்கு முன்பே லீக்… எடிட்டிங் ரூமிலேயே அரங்கேறிய ஜனநாயகன் படத் திருட்டு… சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…

36 minutes ago

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

46 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

53 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

57 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

1 மணத்தியாலம் ago