முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு பல பிளவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா என கட்சி பிரிந்து கிடக்கிறது. அதேசமயம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சியை தன்வசம் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 9 வருடங்களாக தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவுக்கு தோல்வி மேல் தோல்வி கிடைத்து வருகின்றது. இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். பிரிந்து சென்ற தலைவர்களை இணைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பலரும் கூறி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து செங்கோட்டை எண் கட்சி ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடுபட்டு பத்து நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். பிறகு டெல்லி சென்று செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் இபிஎஸ்ஸும் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புக்குப் பிறகு செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டமானது நடைபெற்ற வரும் நிலையில் இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையனும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக நாமக்கல் கிட்னி திருட்டு,கரூர் கூட்ட நெரிசல் பலி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டையுடன் பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடனான கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்த செங்கோட்டையனும் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டார். எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைப்பு தொடர்பாக குரல் கொடுத்தது செங்கோட்டை எனக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லாத காரணத்தாலும் பாஜகவின் தலைமையின் அறிவுறுத்தல் காரணமாகவும் அமைதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இபிஎஸ் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…