‘எனக்கு மீனாவை கல்யாணம் பண்ணிக் கொடுங்கனு, வீட்டுக்கே சென்று பிரபல நடிகர்’.. அதை காரணம் காட்டி NO சொன்ன மீனாவின் அம்மா..

By Sumathi

Updated on:

நடிகை மீனா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக 1990களில் வலம் வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜூன், முரளி, சரத்குமார், கார்த்தி என அன்றைய முன்னணி ஹீரோக்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பிறமொழிகளிலும் மீனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உண்டு. இப்போதும் நடிகை மீனா தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

Meena

   

நடிகை மீனாவை பொருத்த வரை எந்தவிதமான சர்ச்சைகள், விமர்சனங்களிலும் சிக்காதவர். நல்ல நடிப்பை தந்து படப்பிடிப்பில் நல்ல பெயர் வாங்கியவர். மற்ற நடிகைகளை போல கெத்து காட்டுவது, ஓவர் பந்தா போன்றவற்றை மீனாவிடம் யாரும் பார்த்ததாக இதுவரை தகவல் இல்லை. கடந்தாண்டில் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பல மாதங்கள் அவரது நினைவால் மனம் தவித்த மீனா, இப்போதுதான் அதில் இருந்து மீண்டு வந்து திரிஷியம் 3 படத்தில் மோகன்லாலுடன் நடித்து வருகிறார். தமிழிலும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Meena

கடந்த 1990களில் உச்ச நாயகியாக இருந்த மீனா நடிகர் சரத்குமாருடன் நாடோடி மன்னன், நாட்டாமை போன்ற படங்களில் நடித்தார். அப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதை ஒரு நேர்காணலில் நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். நடிகை மீனா, சரத்குமாருடன் இரண்டு படங்களில் நடித்திருந்தார். அப்போது மீனாவின் வீட்டுக்குச் சென்ற சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீனாவின் அம்மா ராஜமல்லிகாவை சந்தித்து, உங்கள் மகள் மீனாவை எனக்கு திருமணம் செய்துகொடுங்கள் என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார்.

Meena

அப்போது மீனாவின் அம்மா, வேண்டாம் தம்பி, மீனாவுக்கும் உங்களுக்கும் வயது வித்யாசம் அதிகமாக உள்ளது. பல படங்களில் கமிட் ஆகி மீனா நடித்தும் வருகிறார். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள் என் கூறியிருக்கிறார். அதன்பிறகு எந்த வற்புறுத்தலும், நிர்பந்தமும் செய்யாமல் நாகரிகமாக அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அதன்பிறகுதான் சூர்யவம்சம் படத்தில் நடித்த போது, ராதிகா மீது காதல் வயப்பட்டு அவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார் சரத்குமார்.

author avatar
Sumathi