நடிகர் மற்றும் இயக்குநரான சமுத்திரகனி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர்கள் பாலா மற்றும் ஆர்.வி. உதயகுமாருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, சமுத்திரகனி மிகவும் ஆவேசமாகவும் எரிச்சலுடனும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது. நீ அவர்களை வெளியே கூட்டிட்டு போ; 4 சுவற்றுக்குள் வைத்திருக்க வேண்டியதுதானே” என்று அவர் கோபமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், யாரைப் பழிவாங்குகிறாய் என்றும், அனைத்தும் நன்றாகச் சென்றுகொண்டிருந்த நிலையில் இனி முடியாது என ஒரு கட்சிக்காரனே சொல்கிறான் என்றும் அவர் அந்த உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை முன்வைத்து சமுத்திரகனி பேசியுள்ள இந்த வீடியோ, சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமுத்திரகனியின் இந்தத் திடீர் விமர்சனம் எதைக் குறிக்கிறது என்பது குறித்து இணையத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…