நாமக்கல் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(68). இவர் ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர். இவரது மனைவி கஸ்தூரி(54). இந்த தம்பதியினருக்கு பிரதீப் கண்ணன்(37) என்ற மகனும், ப்ரீத்தி கண்ணன்(34) என்ற மகளும் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்தூரி கணவர் பிள்ளைகளைப் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றார். வெளிநாட்டு வேலைக்காக சென்ற பிரதீப் அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து குடியேறினார். தற்போது கண்ணன் தனது மகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
தந்தை, மகள் இருவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இருந்துள்ளது. மேலும் பிரீத்திக்கு திருமண செய்ய சரியான வரன் அமையாததால் கண்ணன் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு ப்ரீதியும், கண்ணனும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது தந்தை மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. முன்னதாக கண்ணன் எழுதிய கடிதத்தில் நோய் பாதிப்பு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்கிறோம். கடன் தொல்லையோ வேறு எந்த பிரச்சனையோ காரணம் இல்லை என எழுதியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…
கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…
குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…
மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…