தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களிலும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதுவரை உலக அளவில் சுமார் 600 கோடிக்கு மேல் இந்த திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் எடுக்க செலவு செய்யப்பட்ட பட்ஜெட்டை விட பல கோடி ரூபாய் இந்த திரைப்படம் லாபம் கொடுத்துள்ளதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்விட்டரில் பகிர்ந்து உள்ள ஒரு பதிவு கோலிவுட்டை ஆட்டம் காண வைத்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினியின் சம்பளம் 80 கோடி என முதலில் தகவல் வெளியான நிலையில் அதன் பிறகு வசூல் 600 கோடியை தாண்டியதும் நடிகர் ரஜினிக்கு 100 கோடி ரூபாய் காண செக்கை கலாநிதி மாறன் வழங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கு ரஜினி 200 கோடியிலிருந்து 250 கோடி வரை தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தலைவர் சம்பளம் 300 கோடியாக உயர்வு, paddy sun சம்பளம் இனி 100 கோடி என ப்ளூ சட்டை மாறன் ரஜினியின் சம்பளம் 300 கோடி எனவும் நெல்சன் சம்பளம் 100 கோடி என வடைகளை சுட்டு கோடம்பாக்கம் சமஸ்தானத்தையே ஆட்டம் காண வைத்துள்ளார். தற்போது அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ்…
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக்…
நடிகை சினேகா தனது மகன் விகானுடன் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்து…
நடிகை அமலா பால் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…
நடிகர் அஜித்தின் செயலால் இயக்குனர் மகிழ் திருமேனி மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும்…