தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இமயமலை சுற்றுப்பயணம் சென்ற ரஜினி சமீபத்தில் உத்திரபிரதேசம் சென்றார். அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்ப்பதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் யோகி ஆதித்யநாத் வராததால் அந்த மாநில துணை முதல்வருடன் ரஜினி ஜெயிலர் திரைப்படம் பார்த்தார்.
பிறகு உத்திரபிரதேச மாநில முதல்வரை சந்திக்க நேரில் சென்ற ரஜினி அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஜினிக்கு தற்போது 72 வயது ஆகும் நிலையில் 51 வயதான யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி வழங்கியதை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள். இந்த செயல் தமிழகத்தின் மானத்தை ரஜினிகாந்த் அடமானம் வைத்து விட்டதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வர பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் ரஜினி ரசிகர்கள் அவர் எதற்காக யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தார் என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேசத்தின் முதல்வர் மட்டுமல்லாமல் நாத சைவ சம்பிரதாயத்தை பின்பற்றும் கோரக்நாத் மண்டபத்தின் பீடாதிபதியும் கூட. அவரைக் கண்டால் வணங்க வேண்டும் என்பதுதான் தர்மம் என்பதால் ரஜினியும் அதனை கடைப்பிடித்ததாக ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…
முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய…
ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு சாட்சியாக, டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அபுதாபி…