தமிழக ஆளுநராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.என். ரவி, தற்போது மேற்கு வங்க மாநில ஆளுநராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய உளவுத்துறையின் முன்னாள் இயக்குநராக இருந்த அவர், தமிழகத்தில் இருந்தபோது வெறும் ஆளுநராகச் செயல்படாமல், பாஜகவின் வளர்ச்சி மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் திட்டங்களை வகுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் இந்துத்துவ கொள்கைகளைப் புகுத்துவது மற்றும் தமிழக அரசுடனான மோதல் எனப் பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தமிழகத்தை விட்டு வெளியேறினாலும், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தீர்மானிக்கும் வகையிலான முக்கிய அரசியல் வியூகங்கள் அடங்கிய ரகசியக் கோப்பு ஒன்றை மேலிடத்திடம் அவர் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜக தனித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான தொகுதிகள் மற்றும் வியூகங்கள் அடங்கிய அந்த ‘சீக்ரெட் ஃபைல்’, வரும் தேர்தல்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ரவி கையாண்ட அதே அரசியல் தந்திரங்களை, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக அவர் இப்போது செயல்படுத்தப் போவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…