விஜய் டிவியில் சில முக்கியமான கேம் ஷோக்களை கலகலப்பாக, காமெடியாக தொகுத்து வழங்கி வருவதால், ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற செலிபரட்டி பிரியங்காதேஷ்பாண்டே. பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்தாண்டில் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரது சில நடவடிக்கைகள் பார்வையாளர்களுக்கே பிடிக்காமல் போனது. எனினும் தொடர்ந்து அவர் டிவி ஷோக்களை நடத்திக்கொண்டு இருக்கிறார். 15 ஆண்டுகளாக ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவர் பயணம் செய்துள்ளதை கொண்டாடும் வகையில் சமீபத்தில் பிரியங்கா 15 என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சி, நேர்காணல் நடந்தது.
இதில் பிரியங்காவும் அவரது அம்மாவும் கலந்துக்கொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சில செலிபரட்டிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது பிரியங்காவின் அம்மா பேசுகையில், வாழ்க்கையில் அவள் (பிரியங்கா) சில தவறுகள் செய்திருக்கிறாள். இனிமேல் அதுபோன்ற விஷயங்களில் அவள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு மகளாக, அவளது சந்தோஷமான வாழ்க்கை எனக்கு முக்கியம். எங்கள் குடும்பத்தில் அவள் மூத்த மகள். அவள் கண் கலங்கினால், என்னால் தாங்கிக்கொள்ள முடியாது, என்றார்.
அதற்கு பதிலளித்து பேசிய பிரியங்கா தேஷ்பாண்டே, எனக்கு எது வேண்டும் என்றாலும், எனக்கு எது பிடித்திருந்தாலும் என் விருப்பப்படி தான் செய்திருக்கிறேன். என் அம்மாவுக்கு எப்போதும் நான் தலைகுனிவை ஏற்படுத்தக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். ஆனால் ஒரு விஷயம் நமக்கு ரொம்ப பிடித்துப் போய், அது நம் வாழ்க்கையில் அது இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருப்போம் என்று நினைத்து ஒரு முடிவை எடுக்கிறோம். அந்த விஷயத்தை அடைகிறோம். ஆனால் ஒரு கட்டத்தில் ரியலைஸ், அனலைஸ் செய்து பார்க்கும்போது, நாம் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம்.
அதை விட்டு விலக வேண்டும். அப்போது யாராவது நமக்கு தோள் கொடுக்கும் ஆதரவாக, உதவியாக வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் நான் அம்மாவிடம் சென்றிருக்கிறேன். அப்போதும் என்னை அம்மா ஏற்றுக்கொண்டு எப்பவும் போல எனக்காக நின்றிருக்கிறார், என்று பேசி இருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. அவரது திருமண வாழ்க்கை குறித்துதான் அப்படி பேசினாரா, என்று இந்த விஷயம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…