அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில், 27 வயதான டாசன் ஜேம்ஸ் பிரவுன் என்ற பாதிரியாரின் மகன், தங்கள் வீட்டில் தங்கியிருந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றத்தை மறைப்பதற்காக டாசனின் தாயாரான சப்ரினா, அதிகாரிகளைத் திசைதிருப்பும் நோக்கில் போலி டிஎன்ஏ தரவுகளை உருவாக்குமாறு வற்புறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கென்ட்ரெல் பௌடனும், குற்றவாளியிடமிருந்து பணம், வாகனம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இந்த அநீதியை மறைக்க உடந்தையாக இருந்துள்ளார்.
சிறுமியின் கைபேசியில் இருந்த பாலியல் வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்த துப்பறிவாளர்கள், இந்த வழக்கில் தொடர்புடைய டாசன், அவரது தாய் சப்ரினா மற்றும் சிறுமியின் தாய் பௌடன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் உண்மை அம்பலமானதைத் தொடர்ந்து, குற்றவாளி டாசன் நாட்டை விட்டுத் தப்பத் திட்டமிட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது சிறுவர் வன்கொடுமை, மனிதக் கடத்தல் மற்றும் ஆதாரங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.…
தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம்…
ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…