சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் ராமதாஸ் ஆதரவாளர். இந்நிலையில் 4ஆம் தேதி வாழப்பாடி அருகே பாமக நிர்வாகியின் தந்தை இறுதிச் சடங்குக்கு சென்றபோது வாகன நிறுத்தத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து அன்புமணி ஆதரவாளர்களுக்கும் அருள் ஆதரவாளர்களுக்கும் மோதல் உண்டானது. பின்னர் இரு தரப்புக்கும் எதிராக 4 வழக்குகள் பதிவாகின. இதனால் அன்புமணி தரப்பு 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் அருள் மீது நடவடிக்கை இல்லை எனக் கூறி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனையடுத்து பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் பேசினார். அருள் மீது 4 புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும், ஆளும் கட்சி தொடர்பால் ஜிகே மணி, அருள் சட்ட ஒழுங்கை பாதிக்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார். இந்நிலையில் அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கைதான எங்கள் தரப்பினரை குண்டரில் போட 10 லட்சம் கொடுத்ததாக தகவல் எனவும் தெரிவித்தார்.
பின்னர் போலீசார் பாரபட்சம் காட்டினால் பெரிய போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தார். பாமகவில் 99% உறுப்பினர்கள் அன்புமணி பக்கம் உள்ளனர் எனவும், அருள் போலீசைப் பயன்படுத்தி பிரச்சனை உருவாக்குகிறார் எனக் கூறினார். இதனையடுத்து சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் நியமிக்க வேண்டும் அல்லது நீதிமன்றம் செல்வோம் எனத் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…
தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…
தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…
அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் இந்தத் திடீர்…