ஓ.பன்னீர்செல்வம் திமுக கூட்டணியை ஆதரிக்கும் முடிவை எடுத்தது முதல், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இதன் விளைவாக, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்ட திருவையாறு முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜி.எம். சுப்ரமணியன், தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்ட அவர், எதிர்வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பாடுபடுவேன் என உறுதி அளித்துள்ளார். நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்களே அடுத்தடுத்து தன்னை விட்டுப் பிரிந்து செல்வது, அரசியல் களத்தில் ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…